இறைவனிடம் இறைவன் உபதேசம் பெற்ற முக்கியத் திருத்தலங்களும், உபதேசித்த இறைவனும், உபதேசம் பெற்ற இறைவனும்;
(1) ஓமாம்புலியூர் – தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
(2) உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
(3) இன்னம்பர் – அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
(4) திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றார்.
(5) ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
(6) திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
(7) திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
(8) சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
(9) திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
(10) திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
(11) திருக்கழு குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
(12) திருமயிலை - 1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
(13) செய்யாறு - வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
(14) திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
(15) திருப்பனந்தாள் - அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
(16) திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
(17) திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
(18) மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
(19) திருவாவடுதுறை - அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
(20) தென்மருதூர் - 1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
(21) விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
(22) திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
(23) உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
(24) காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
(25) திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
(26) விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
(27) திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
(28) கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
(29) திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்
No comments:
Post a Comment