Monday 26 August 2024

இளமையாக்கினார் கோயில்

 இளமையாக்கினார் கோயில்


சிதம்பரத்தில் உள்ள காசு கடை தெருவில், ‘இளமையாக்கினார் கோயில்’ என்று வழங்கப்படும் திருப்புலீஸ்வரர் திருத்தலம் உள்ளது. 


வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்ததால் இறைவன் திருப்புலீஸ்வரர் என்றும் அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்பட்டனர். 


ஆனால், திருநீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை அளித்த பிறகு இவர்கள் யவனேஸ்வரர், யவனாம்பிகை என்று அழைக்கப் படுகின்றனர். 


இக்கோயில் திருக்குளம், ‘இளமை தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. முதிய வயதில் திருநீலகண்ட நாயனாரும் அவர் மனைவியும் மூழ்கி இளமையாக எழுந்த குளம்.


இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய இக்குளம், சுற்றிலும் மதில் அமைக்கப் பட்டு மிக சுத்தமா கப் பராமரிக்கப்படுகிறது 


பெரிய பிராகாரங்களுடன் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு இருக்கிறது இவ்வாலயம். 


இது திருநீலகண்டருடன் மட்டும் அல்லாமல், கணம்புல்ல நாயனார் வாழ்க்கையுடனும் தொடர்புடைய ஆலயம்.


கணம்புல்ல நாயனார் விற்காத புல்லைக் கொண்டு வந்து  விளக்கேற்ற முற்பட்டார். ஆனால், புற்கள் எரியவில்லை. உடனே கருகிப் போயின. 


இதைக் கண்ட நாயனார் சற்றும் மனம் தளராமல் தனது முடியினைத் திரியாக்கி அதில் தீபம் ஏற்றினார். அவர் பக்தியை மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அவரை ஆட்கொண்டார். 


இத்தகைய சிறப்புக்கள் வாந்த இந்தத் திருத்தலத்துக்கு வந்து உங்கள் இளமையை மீண்டும் பெற்று வாழ்வீராக.


அமைவிடம்: 


சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அருகில்.


No comments:

Post a Comment