Tuesday 27 August 2024

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,* *சத்திரம் கிராமம்,* *புதுக்கோட்டை மாவட்டம்

*அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,*

 

*சத்திரம் கிராமம்,* 


*புதுக்கோட்டை மாவட்டம் .*


*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*


*மூலவர்: – காமாட்சியம்மன்*


*பழமை: – 500 வருடங்களுக்கு முன்*


*ஊர்: – சத்திரம் கிராமம்*


*மாவட்டம்: – புதுக்கோட்டை*


*மாநிலம்: – தமிழ்நாடு*

*சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவிலில் (மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டு உருவமின்றி அருவமாய் இருக்கும் தலம்) வசித்து வந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் அங்கிருந்து கைக்குழந்தையான மகனுடன் வெளியேற்றப்பட்டாள். வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் அவள் தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார்கோவிலுக்கு வந்தாள். இவ்வூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.*


*வரும் வழியில், அவள் சில குடுகுடுப்பைக்காரர்களைச் சந்தித்தாள். அவர்கள் அவள் ஊர் வரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவ்வூரிலேயே தங்கி விட்டனர்.*


*அவளது குழந்தை வளர்ந்து பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி அதை ரசித்துக் கேட்டாள். அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை கொடுத்தாள். இது குழந்தைக்கோ, குழந்தையின் தாய்க்கோ தெரியாது. ஊரிலுள்ளோர், “இந்த குழந்தை இவ்வளவு அழகாக குறி சொல்கிறானே! இவன் என்ன சொன்னாலும் பலிக்கிறதே!, எல்லாம் அவனது அன்னை பூஜிக்கும் காமாட்சியின் மகிமைதான் என எண்ணினர்.*


*இதனிடையே காளையார்கோவிலை அச்சமயம் ஆண்ட மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், நோய் தீரவில்லை. தீர்க்க முடியாத அந்த நோய்க்கான காரணத்தை அறிய குடுகுடுப்பைக்காரர்களை மன்னர் வரவழைத்தார். அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி, சில காரணங்களைக் கூறினர்.*


*ஆனால், அவை ஏற்றுக்கொள்ளக் கூடிவைகளாக இல்லை. அவர்கள் கூறிய காரணங்களின் அடிப்படையில், பரிகாரம் செய்தும் பலனில்லை. எனவே, மன்னர் குடுகுடுப்பைக்காரர்களை சிறையில் அடைத்து விட்டார். தன் தாயை சிறுவயதில் காப்பாற்றிய குடுகுடுப்பைக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த சிறுவன், அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிட்டான்.*


*அவன் நேரடியாக அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோய் குணமானது. மனம் மகிழ்ந்த மன்னன், “”உனக்கு என்ன வேண்டும்?’ என கேட்க, குடுகுடுப்பைக்காரர்களை விடுவிக்க வேண்டுமெனவும், தனக்கு ஓர் உடுக்கு பரிசாகத் தர வேண்டும் எனவும் கேட்டான்.*


*அவ்வாறே மன்னரும் செய்தார். காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், காமாட்சிக்குப் பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கோயில் எழுப்பினர். உயிருள்ள பெண் போல, அலங்கார கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை காமாட்சி.*

*🌹அன்புடன்🌹*

 *சோழ.அர.வானவரம்பன்*.

               *(+918072055052)*

*பொதுவாக சிவன் கோயில்களில் தான் சிவராத்திரி விழா நடக்கும். அம்மன் கோயில்களில் நவராத்திரியே பிரதானம். ஆனால், சக்தியின்றி சிவமில்லை என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமத்தில் 64 பரிவார தெய்வங்களுடன் கொலு வீற்றுள்ள காமாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.*


*இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சிறப்பு பூசை உண்டு. சிவாரத்திரியை ஒட்டி பால்குடம், காவடி பவனி நடக்கும். மாலையில் திருவிளக்கு பூசை நடத்தப்படும்.*


*கோரிக்கைகள்:*


*திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் கிட்ட வேண்டுகின்றனர்.*


*நேர்த்திக்கடன்:*


*கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.*




Monday 26 August 2024

கொடுமுடி நாகாபரணம்

 கொடுமுடி நாகாபரணம் .


எத்தனை நாகாபரணம் வந்தாலும் இந்த நாகாபரணதிற்கு தனி அழகு காரணம் என்னவென்று கேட்டால்.இது திருப்பாண்டிகொடுமுடி அருள்மிகு ஸ்ரீ மகுடேஸ்வரசுவாமிக்கு மகுடம் போல சாத்தப்படும் நாகாபரணம் ஆயிற்றே!!!


ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.


அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. 


ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.


சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.


மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.


மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.


அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்

அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி

நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இளமையாக்கினார் கோயில்

 இளமையாக்கினார் கோயில்


சிதம்பரத்தில் உள்ள காசு கடை தெருவில், ‘இளமையாக்கினார் கோயில்’ என்று வழங்கப்படும் திருப்புலீஸ்வரர் திருத்தலம் உள்ளது. 


வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்ததால் இறைவன் திருப்புலீஸ்வரர் என்றும் அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்பட்டனர். 


ஆனால், திருநீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை அளித்த பிறகு இவர்கள் யவனேஸ்வரர், யவனாம்பிகை என்று அழைக்கப் படுகின்றனர். 


இக்கோயில் திருக்குளம், ‘இளமை தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. முதிய வயதில் திருநீலகண்ட நாயனாரும் அவர் மனைவியும் மூழ்கி இளமையாக எழுந்த குளம்.


இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய இக்குளம், சுற்றிலும் மதில் அமைக்கப் பட்டு மிக சுத்தமா கப் பராமரிக்கப்படுகிறது 


பெரிய பிராகாரங்களுடன் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு இருக்கிறது இவ்வாலயம். 


இது திருநீலகண்டருடன் மட்டும் அல்லாமல், கணம்புல்ல நாயனார் வாழ்க்கையுடனும் தொடர்புடைய ஆலயம்.


கணம்புல்ல நாயனார் விற்காத புல்லைக் கொண்டு வந்து  விளக்கேற்ற முற்பட்டார். ஆனால், புற்கள் எரியவில்லை. உடனே கருகிப் போயின. 


இதைக் கண்ட நாயனார் சற்றும் மனம் தளராமல் தனது முடியினைத் திரியாக்கி அதில் தீபம் ஏற்றினார். அவர் பக்தியை மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அவரை ஆட்கொண்டார். 


இத்தகைய சிறப்புக்கள் வாந்த இந்தத் திருத்தலத்துக்கு வந்து உங்கள் இளமையை மீண்டும் பெற்று வாழ்வீராக.


அமைவிடம்: 


சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அருகில்.


அகஸ்தியர் ஆலயம் பொகளூர், விக்கிரகங்கள் செய்யும் பணி

 இன்று நானும் குருஜியும் திருமுருகன் பூண்டி என்னும் ஊருக்கு சென்று அங்கே இருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்து சிற்பக் கலைக்கூடங்களில் எது சிறந்த கலைக்கூடம் என்று கேட்டு அறிந்து அந்த கலைக்கூடத்திற்கு சென்று சிலைகளை ஆர்டர் கொடுத்துள்ளோம் 


நமது ஆலயத்தின் நுழைவு வாயில் ஆறடி உயரம் 4 அடி அகலம் கருவறை அளவு 11 அடி நீளம் 10 அடி அகலம் இதற்கு தகுந்தவாறு நாலு அடி அகலத்தில் ஒரு பீடம் அமைக்கப்படும் 


அந்த பீடத்தின் மேல் மற்றொரு சிறிய பீடம் இருக்கும் அந்த பீடத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஸ்ரீலோபமுத்ரா சிலைகள் நிறுவப்படும்


இந்த இரண்டு பீடத்திற்கு மத்தியில் அஷ்டபந்தனம் எனப்படும் அஷ்டபந்தனம் போடப்பட்டு இந்த தரை பீடத்தின் மேல் அகஸ்தியர் லோப முத்ரா இருக்கும் இடம் அமர்த்தப்படும் கும்பாபிஷேகத்தின் போது இந்த நிகழ்வு நடைபெறும்


 அகஸ்தியர் சிலை மூன்றேகால் அடி லோப முத்ரா சிலை மூன்று அடி ஆகிய அளவில் இருக்கும் 


பீடத்தின் மொத்த அளவு ஒரு அடி.


சிலையின் உயரம் 3 1/4 அடி . ஆக மொத்தம் தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் ஒரு அகஸ்தியர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


சதுர பீடத்தின் வலது ஓரத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பு இருக்கும் .  அபிஷேகம் செய்யும் நீர் அந்த ஆவுடையார் வழியாக வெளியேறும் .  



மேலும் அந்த நீர் கட்டிடத்திற்கு வெளியே வந்து விழும் இடத்தில் மூணே கால் அடி நீளத்தில் இருபுறமும் யாழி அமைக்கப்பட்டு அதன் நடுவில் நீர் வந்து கீழே விழுகுமாறு கோமுகம் அமைக்கப்படும் 


இது தவிர அகஸ்தியர் லோப முத்ரா மூணே கால் அடி 3 அடி உயர சிலைகளுக்கு பின்னால் 4 முதல் 4.5 அடி உயரத்தில் வட்ட வடிவில் இரண்டு சிலைகளுக்கும் சேர்த்து ஒரு பெரிய பிரபாவளி கல்லிலே வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


அந்த பிரபாவளியில் கலை வேலைப்பாடுகள் நிறைய இருக்கும்., பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 


இதை தவிர உச்சிஷ்ட மா கணபதி சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 உதிஷ்டமகா கணபதி அவர்களது மடியில் அவர்களது மனைவி அவர்கள் அமர்ந்திருப்பார் 


மகா கணபதியின் துதிகை தன்னுடைய மனைவியை தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் சாஸ்திரப்படி உச்சிஷ்ட மகாகணபதி சிலை அமைக்கப்படும்.


 அகஸ்தியர் தனது விக்கிரகத்திற்கு வாகனம் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டார் 


அதனால் அகஸ்தியர் உலோப முத்ரா விக்கிரகங்களுக்கு வாகனம் அமைக்கப்படவில்லை.


 உஜ்ஜிஷ்ட மகா கணபதி அவர்களுக்கு சாஸ்திரப்படி மூஞ்சூறு வாகனம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.


 மேலும் உஜ்ஜிஷ்ட மகா கணபதி சிலை நுழைவு வாயிலில் ராகு மற்றும் கேது ஆகியவை பிரதிஷ்டை செய்யப்படும் .


ராகு கேது சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது


ராகு மற்றும் கேது சிலைகள் நிறுவப்பட்டால் அங்கே திருமணம் செய்யலாம் என்பது சாஸ்திரம் ஆகும்


 இவை அனைத்தும் சேர்த்து அவர்கள் கூறிய விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 


அவர்கள் 20,000 தள்ளுபடி செய்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்ற விலை கூறினார்கள்.


 நாங்கள் மீண்டும் மேலும் பேசி கெஞ்சி கேட்டுக் கொண்டதன் பேரில் மேலும் 20000 குறைத்து ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் இந்த சிலை வேலைப்பாடுகளை வடிவமைத்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்கள்.


 இதற்கு முன் பணமாக 60,000 கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 40 ஆயிரம் ரூபாய் இன்னமும் கொடுக்க வேண்டும் .

இதற்கு நிதி தேவைப்படுகிறது.

 தற்போது சுமார் 58 ஆயிரம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளது ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸ் தொகையில் இதுவே 2000 ரூபாய் குறைவு.


 இன்னமும் சிலை டெலிவரி எடுக்கும் போது மேலும் 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் .


*எனவே மொத்தமாக இன்னமும் 42 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*


 பொதுமக்கள் அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த 58 ஆயிரம் என்ற பெரிய தொகையை நிதியாக தந்து உதவியப்படியால் இன்று எங்களுக்கு எளிதாக சென்று 60 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு முன்பணமாக கொடுக்க முடிந்தது .


மேலும் இன்னமும் 20 நாட்கள் அவகாசம் உள்ளது அதற்குள் இந்த 42 ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு எல்லாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ *கொடுக்காதவர்கள் யாராவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்* நன்றி






Thursday 22 August 2024

காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்

 காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்!!!


பீஜ (அட்சர) மந்திரம் நமது உடலில் உள்ள சக்கரங்களை இயக்கி சக்தி அளித்து சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது. 


இதனை பிரயோகிக்கும் இடம் அனைத்திலும் மிகப்பெரிய அதிர்வாற்றலை உண்டாக்கி அவ்விடத்திலும் அங்குள்ளோரின் ஆன்ம, ஜீவ சக்தியை பெருக்கும். 


க்லீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், கௌம், க்ரீம், ஹௌம், ஔம், சௌம்  என்று ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரங்கள் உண்டு.


அட்சரங்கள் முன்,பின் இடம் மாறும்போது ஒளியும்,நிறமும்,அதிர்வும் மாறும்.


இவைகளை சரியான முறையில் வரிசைபடுத்தி பிரயோகிக்க அதீத ஆற்றலை உணரலாம். 


நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். 


ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரம் ஏழு சக்கரங்களுக்கும், இந்திரயோனி (உள்நாக்கு), பிரம்மநாளம்( தலைஉச்சி) பகுதிகளுக்கும் அதிர்வுகளை கொடுத்து சக்தி ஊட்டும்பொழுது பலன்களை பெரிதும் ஈர்க்கின்றது.


க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்

ஹ்ரீம் – மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்

கௌம் – விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்


அதாவது ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ 

(அட்சர) மந்திரம்'ஹௌம்' தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும்.


சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும்.


இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.


கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளேன.. 


அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும். 


மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

MESHAM – OM AIM KLEEM SOUM


ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

RISHABAM – OM AIM KLEEM SHRIM


மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

MITHUNAM – OM KLEEM AIM SOUM


கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

KADAGAM – OM AIM KLEEM SHRIM


சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

SIMMAM – OM HREEM SHREEM SOUM


கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

KANNI – OM SHREEM AIM SOUM


துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

THULAM – OM HREEM KLEEM SHREEM


விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

VRICCIGAM – OM AIM KLEEM SOUM


தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

THANUSU – OM HREEM KLEEM SOUM


மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

MAGARAM – OM AIM KLEEM HREEM SHREEM SOUM


கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

KUMBAM – OM HREEM AIM KLEEM SHREEM


மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

MEENAM – OM HREEM AIM KLEEM SHREEM


*ராசி தெரியாத அன்பர்கள்*


க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்       

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்


ஓம் சிவாய நம என முடிக்கவும்.


சௌம்

ஔம்

ஹௌம்

க்ரீம்

கௌம் 

ஐம்

ஹ்ரீம்

ஸ்ரீம்

க்லீம்


ஓம் சிவாயநம என முடிக்கவும்.


இரண்டும் சேர்த்து ஒரு முறை.


இவ்வாறு குறைந்தபட்சம் 54 முறை மனதினுள் ஜெபிக்க வேண்டும்.


மேலும் இதனை  எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் மென்மேலும் வந்து சேரும்.


முகநூல் பதிவு https://www.facebook.com/share/dJgqmBqoZLL2hUTh/?mibextid=oFDknk

அகத்தியர் சிலை செய்யும் பணி

 அன்பான அகத்திய பக்தர்களே வருகின்ற 26 ஆம் தேதி திங்கட்கிழமை கோகுலாஷ்டமி அன்று நமது புதிய ஆலயத்தில் ஸ்தாபகம் செய்வதற்காக எம்பெருமான் அகஸ்தியர் மற்றும் தேவி லோக முத்திரை மற்றும் விநாயகர் சிலைகள் ஆகியவை செய்வதற்காக சிற்பியிடம் முன்பணம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


 திங்கள்கிழமைக்குள் தங்களால் முடிந்த ஒரு தொகையை அகத்தியர் சிலைக்காக அனுப்பி வைக்கவும் .  பல பக்தர்களிடம் இருந்து சிறிது சிறிது நன்கொடை பெற்று சிலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


 எனவே அவர் அவர்கள் தங்களால் முடிந்த அளவு குறைந்தபட்சம் 100 200 500 1000 ஆகிய தொகைகளில் உங்களின் வசதிக்கு ஏற்றவாறு அகத்தியர் சிலையில் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


 திங்கட்கிழமை காலை வரை இந்த பணம் அகத்தியர் சிலைக்கு என்று தனியாக வரவு வைக்கப்பட்டு திங்கட்கிழமை அன்று சிற்பியிடம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் 

Gpay 9176012104 Santhanam T Ramanathan

மிக்க நன்றி

Sunday 11 August 2024

அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....

 நமது அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....செய்தி


 அகஸ்தியர் பீடத்தில் குருஜி அவர்களால் நாடி வாசிக்கப்பட்டது அந்த ஜீவ நாடியில் எழுந்தருளிய எம்பெருமான் அகஸ்தியர் பெருமான் இனிமேல் யாரும் தீப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்.


* *நல்லெண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஓலைச்சுவடியில் அகத்திய பெருமான் உரைத்துள்ளார்* 


* *எனவே நமது பீடத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் வரும்போது தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொண்டு வந்து கொடுக்கவும்* 


அதேபோல  தங்கள் இல்லங்களில் நல்லெண்ணெய் முடிந்தவரை நல்லெண்ணெய் தீபம் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி